எனது அரசியல் குருவின்(பொன்முடி அவர்கள்) விவேகமும் வேகமும்ம் எனது தந்தை கண்ணன் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் விஷயமாக கருதுகிறோம். நான் அவரை முதன் முதலாக 1984ம் ஆண்டு பெரிய செவலை என்ற இடத்தில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் எனது தந்தையாருடன் சந்தித்தேன். அப்போது அவர் கல்லூரி பேராசிரியராக விழுப்புரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போதே அவரின் அரசியல் ஆர்வம் எங்களை வியக்க வைத்தது. நான் அவரது தந்தையிடம் 5ம் வகுப்பு படித்தேன் என்பதும் எனக்கு பெருமை தரும் விஷயம். அவரை பொதுவாக பார்த்தால் மிகுந்த கோபம் கொண்டவராக தெரியும். ஆனால் மிக மிக தன்மையானவர் மற்றும் எல்லோரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு திகைப்பூட்டூவார். அவரால் விழுப்புரம் நகரம் அடைந்த பயன் அதிகம்.

Posted by கை.க.சோழன் | 9:21 AM

எனது அரசியல் குருவின்(பொன்முடி அவர்கள்) விவேகமும் வேகமும் கலந்த பேச்சு எப்போதுமே பாராட்டிற்க்கு உரியவை. அவர் தனது மாணவப்பருவத்திலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அவரும் எனது தந்தை கண்ணன் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் விஷயமாக கருதுகிறோம்.

நான் அவரை முதன் முதலாக 1984ம் ஆண்டு பெரிய செவலை என்ற இடத்தில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் எனது தந்தையாருடன் சந்தித்தேன். அப்போது அவர் கல்லூரி பேராசிரியராக விழுப்புரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்போதே அவரின் அரசியல் ஆர்வம் எங்களை வியக்க வைத்தது. நான் அவரது தந்தையிடம் 5ம் வகுப்பு படித்தேன் என்பதும் எனக்கு பெருமை தரும் விஷயம்.

அவரை பொதுவாக பார்த்தால் மிகுந்த கோபம் கொண்டவராக தெரியும்.  ஆனால் மிக மிக தன்மையானவர் மற்றும் எல்லோரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு திகைப்பூட்டூவார்.  அவரால் விழுப்புரம் நகரம் அடைந்த பயன் அதிகம்.

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்....: கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து...வயதுப்பெண்களுக்கான எச்சரிக்கை...

நமது நாட்டின் போக்குவரத்து மிக மிக மோசமானது என்பதற்கு சென்னை ப்ரோட்வயில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையை மிகச் சிறந்த உதாரணமாக சொல்லலாம்.  அவ்வளவு மோசமான சிக்கலான சாலை அதுவும் ரிக்க்ஷா வண்டிகள் நாற்புரமிருந்தும் சாலையை கடக்க முயலும் நிலை இது நமது பூக்கடை காவல் நிலையிதிர்க்கு அருகிலேயே நடக்கிறது. 

அது மட்டுமல்ல, பூக்கடை காவல் நிலையத்திலிருந்து யானை கவுணி வரையிலான என்.எஸ்.சி சாலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலை அதில் ரிக்க்ஷா ஓட்டிகள் மிக சாதாரணமாக எதிர் புறம் வருகிறார்கள்.  அதனை கேட்க ஆளில்லை. காவல் துறையினர் அந்த சாலையை பராமரிப்பது போல் தெரியவில்லை.  

உயர்மிகு சென்னை மாநகராட்சி காவல் துறை தலைவர் இதை சரி செய்தல் மிக நன்றாக இருக்கும்.  பொதுவாக என்ன பிரச்சனை ஆனாலும் இந்த தமிழ் ப்ளாக் இடுகையில் பதிவு செய்து தங்கள் பகுதி பிரச்னைகளை சரி செய்ய எனது மின்னஞ்சல் செய்தால் இங்கே அதனை வெளியிடுவோம்.

Email : kdchozhan@gmail.com 

நான் இன்று இரவு சுமார் ஏழு மணியளவில் நுங்கம்பாக்கதிற்கு சேத்துப்பட்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.  மழை வேறு லேசாக பெய்துகொண்டிருந்தது.  அப்போது என் பின்னால் வந்த ஒரு இரு சக்கர வாகனம் மிக வேகமாக என் அருகில் சென்றது.  அப்போது மழை தேங்கி இருந்ததால் அந்த வாகனம் என் மேல் சேரை வாரி இறைத்து  சென்றது.  சிறிது தூரம் சென்றதும் போக்கு வரத்து நெரிசலால் அந்த வாகனம் மெதுவாக செல்ல நேரிட்டது.   அப்போது அந்து வண்டியின் அருகே சென்ற நான் "ஏம்பா மெதுவாக வண்டி ஓட்டக்கூடாதா இப்படியா கண்மூடி தனமா ஓட்டுவது" என்று கேட்டேன். 

அதே வேகத்தில் அந்த என்னை தாறுமாறாக என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார்.  அவர் உபயோகித்த கெட்ட வார்த்தைகளை நாகரீகம் கருதி இங்கே நான் வெளியிடவில்லை.  "நீ  இங்கிருந்து கை கால் இல்லாமல் தான் போகபோற" இதுதான் அவர் நாகரீகமாக பேசிய வார்த்தை.   நான் மிக மிக பொறுமையாக என் சூழ்நிலையை கையாண்டு அங்கிருந்து கிளம்பினேன் அப்போது அவரது வண்டி என்னை பார்த்தேன் வந்ததே அவருக்கு கோபம்.   திரும்பவும் என்னை அடிக்க வந்து விட்டார் நானும் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

மனிதமும் அதன் மதிப்பும் குறைந்துக்கொண்டே வருவதற்கான ஒரு அறிகுறி இதுவென்றே என்ன தோன்றியது.  நான் கேட்டதற்கு அவர் மன்னிப்பு கோருவது தன சரியான நடைமுறை.   ஆனால் அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திய விதம் அவரது ரவுடித்தனத்தை காட்டியது.  அதுவும் இல்லாமல் ஒரு மனிதன் சக மனிதனை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரீகம் அறியாத மனிதர்களை அதுவம் தமிழனைபார்க்க என் மனம் ஒப்பவில்லை. 

உலகமும் அதன் வேகமும் இதையெல்லாம் ஒரு சாதாரண நடவடிக்கையாக பார்க்கலாம்.  ஆனால் மனிதத்தன்மையின் மாற்றங்களினால் ஏற்படும் விளைவு நமது மனித குலைத்தையே சீரழிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன்.  உதாரணமாக புகை பிடிப்பது உடலுக்கு மட்டும் அல்ல உலகத்திற்கும் கேடு என நினைக்கும் எண்ணம் வரவில்லை என்றால் அவன் மனிதனல்ல என்பதன் அதே விளக்கம் இதற்கும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

வண்டி எண் TN 01 AL ௦0205 னை பார்த்தல் அவருக்கு புத்தி சொல்வதற்கு யாருக்காவது தைர்யம் இருந்தால் இங்கே சொல்லுங்கள். 

சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.   ஏன் இந்த நிலை என்று யோசித்தால் நாம் பத்து வருடங்களுக்கு முன்பே இதற்கான ஆயத்தபணிகளில் ஈடுபட்டிருக்கவேண்டும்.  ஆனால் நமது அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் அதை பற்றி யோசித்ததாக தெரியவில்லை. நான் யாரையும் குறை சொல்லவில்லை  அதேநேரம் நாம் இன்னமும் விழிபடையவில்லை என்பதே உண்மை.  

இப்போதைய நிலைமைக்கு கோயம்பேடு பேருந்து நிலையமே போதவில்லை.  இப்போதே இரு சக்கர வாகனங்களுக்கு நிறுத்த இடமில்லை. இதுவும் நாம் சரியாய் யோசிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.  அடுத்த பத்தாண்டு திட்டம் ஒன்றை வகுத்து அதற்கேற்ப மாற்று திட்டங்களை யோசிக்கவேண்டும்.  அரசாங்கத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை மக்களின் பாடுதான் திண்டாட்டம்.  

வரும் பத்தாண்டுக்குள் நமது போக்குவரத்து சுமை மும்மடங்காகும்.  அதற்கான சாலை வசதி சரியாக இல்லை அதே நேரம் அரசிடம் மாற்று வழியும் இருப்பதாக தெரியவில்லை.    
மலை ஆறுமணியிலிருந்து இரவு பத்து மணிவரை போக்குவரத்து நெரிசல் கோயம்பேடு சாலையில் அதிகமாகிவிட்டது.   இப்போது கட்டப்பட்டுவரும் மேம்பாலங்கள் போதுமா என்று தெரியவில்லை. மேம்பாலம் செல்லும் வழியிலேயே நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.  இதற்கு மாற்று வழி யோசிக்க வேண்டும்.  

போக்குவரத்து விதிகள் கடுமையாக்கபடவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க இடமில்லை. ஏனென்றால் நம் மக்களே நமது சாலை விதிகளை பின்பற்றுவதில்லை.  நான் சூளையிலிருந்து மண்ணடியில் உள்ள தம்பு தெருவுக்கு செல்ல சென்ட்ரல் வழியாக ராஜாஜி சாலை வந்து பிறகு இந்தியன் வங்கி அருகில் இடது புறம் திரும்பி அந்த தெருவை அடைவேன்.  பின் தம்பு தெருவில் இருந்து சூலை செல்ல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை வழியாக செல்வேன்.  

அனால் நமது மக்கள் சிலர் தம்பு தெருவிற்குள் ஒரு வழி பாதையில் எந்த வித அச்சமும் இல்லாமல் எதிர்திசையில் வருவதி கண்டு கோபம் வரும்.  ஆனால் யாருமே அதை பற்றி யோசிப்பதில்லை.  மக்களின் நலனுக்காக சாலை விதிகளை மதிக்க மக்களுக்கே யோசிக்க நேரமில்லை என்பதே உண்மை.  இதில் யாருக்காவது மாற்று கருத்து இருந்தால் தெரிவியுங்கள்.  இவை சில உதாரணங்களே 

சென்னை என்பது லட்ச கணக்கான மக்கள் வாழிடம் ஆகவே விதிகளை நடைமுறைபடுத்துவது சாத்தியமில்லாத ஒன்றா என்பது தெரியவில்லை.  ஆனால் மக்கள் மனம் வைத்தால் எதவும் சாத்தியமே.  தற்போதைய அரசின் மேம்பாலங்கள் கட்டும் பனி மிகவும் பாராட்டுக்குரியவை அதே நேரம் இன்னும் தொலைநோக்குபார்வை வேண்டும் என்பதே என் விருப்பம்.  மக்களின் விருப்பமும் அதுவே. 

ஆட்டோவும் தமிழ்நாடும்

நான் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறேன்.  தமிழ்நாட்டின் பெரும்பாலான பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் சாலை போக்குவரத்து பிரச்சனைகளில் சிக்கியுள்ளன.  சென்னையைப்பற்றி சொல்லவேவேண்டாம் ஏனென்றால் சென்னை போக்குவரத்து மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. என்னை பொறுத்தவரை நான் எனது அலுவலத்திற்கு நான்கு சக்கர வாகனத்திற்கு பதிலாக இரண்டு பயன்படுத்துகிறேன்.

என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் நான் மிக்கம்கிழ்சியாடைகிறேன்.  முதலில் நான் ஆட்டோவும் நானும் என்ற தலைப்பில் எழுதுகிறேன்.  ஏனென்றால் இந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும்.  ஆட்டோ என்றாலே நமது மக்களுக்கு அலர்ஜியாகிவிட்டது.  

நான் நமது ஆடோக்காரர்களை குறை சொல்லவரவில்லை.  அதேநேரம் ஆட்டோ உரிமையாளர்களும், ஆட்டோ ஓட்டுனர்களும், அரசாங்கமும் இதற்கு தீர்வுக்கான வேண்டும்.  நியாயமான கட்டணம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்பதை எல்லோரும் யோசிக்கவேண்டும்.  இதை நமது சென்னை மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.  அதையும் யாராலும் மறுக்கமுடியாது. 

பொதுவாக ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று அல்லது அதற்குமேலான கட்டணமே கேட்பார்கள்.  கட்டணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அதை அரசாங்கம் நியாயமான முறையில் பொதுமைபடுத்தவேண்டும் இல்லையேல் இது ஒரு தீர்க்கமுடியாத பிரச்னையாகவே தொடரும்.  மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்தி அதை செயல்படுத்தவேண்டும்.

கால் டாக்ஸி என்ற நான்கு சக்கர வாகனத்திற்கும், ஆட்டோ கட்டணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை.  நாம் எத்தனையோ காரணங்களுக்காக பணத்தை இழக்கிறோம்.  அதில் இந்த காரணமும் ஒன்று அதனால் மக்களுக்கு நடக்கும் அவமானங்களும் அதிகம்.  நான் இதில் மக்களின் பக்கமிருந்தே பார்க்கமுனைகிறேன்.

நாட்டில் எத்தனையோ பிரச்னைகளுக்கு நடுவில் அரசாங்கம் இதையும் சீர்திருத்தவேடும்.  மக்களின் வாழ்க்கை முறையும் பொருளாதாரமும் நாட்டின் முதுகெலும்பு எனவே நாடு முன்னேற இதுமாதிரியான சிறுசிறு பிரச்சனைகளில் இருந்து மக்களை விடுவிப்பதே அரசாங்கத்தின் கடமை.